செவ்வாய், ஜூன் 03, 2014

மோசமான நினைவுகளை மறக்கச் செய்யும் புதிய மருந்து

மனதில் பதிந்து கிடக்கும் மோசமான நினைவுகளை மட்டும் ஒட்டு மொத்தமாக அழித்துவிடும் புதிய மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது லண்டனில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் நடந்திருக்கிறது.

உணவு முறை பிறழ்ச்சி, முந்தைய கால மன அழுத்தம், போபியாக்கள் போன்ற நோய்களைக் கொண்டவர்களுக்கு இந்த மருந்தினை அளிப்பதன் மூலம் அவர்களது நோயை குணப்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எலிகளுக்கு இந்த மருந்தினை கொடுத்து பரிசோதித்து, இந்த மருந்தின் தன்மையை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இது நம்ம ஊர்க்காரங்களுக்கு சரியா வராதுங்க.. ஏன்னா.. டீவி சீரியல்லயே… சோகமான காட்சிகளைப் பார்த்து பார்த்து அழுறவங்க.. அவங்க சொந்த வாழ்க்கையில நடந்த சோகமான விஷயங்களை மறக்க விரும்புவாங்களா என்ன…

நன்றி: தினமணி

1 கருத்து:

saranya devi சொன்னது…

Ennaku antha marunthu vendum

கருத்துரையிடுக