திங்கள், ஜூன் 30, 2014

இன்றைய சிந்தனைக்கு

பகவத் கீதை
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul 

அறிவிலிகள் ஒரு நூலை முறையாக அறிந்து கொள்ளவில்லையானால், அது அந்த நூலின் குற்றம் ஆகாது. அமிர்தத்தையும் விஷமாக்குபவர்கள் இந்தப் பூமியில் உள்ளனர் அன்றோ?. அவ்வாறு அவர்கள் செய்தால் அது 'அமிர்தத்தின்' குற்றம் ஆகாது. தங்கள் கீழான இயல்புக்கு ஏற்றபடி உயர்வான சாஸ்திரத்தை கீழ்மக்கள் அர்த்தம் கொள்வார்கள் ஆனால் அது அந்த சாஸ்திரத்தின் குற்றம் ஆகாது. பல்லாயிரம் மக்களுக்கு அந்த சாஸ்திரம் வழிகாட்டியிருக்கிறது அல்லவா? புலனடக்கமும், தன்னலத் தியாகமும், தவமும், தொண்டு புரிதலும் இல்லாத கீழ் மக்களுக்கு எந்த சாஸ்திரமும் உதவாது என்பதறிக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக