திங்கள், ஏப்ரல் 29, 2013

இன்றைய சிந்தனைக்கு

செவ்விந்தியர்களின் பத்துக் கட்டளைகள் 

1. பூமி எமது தாய் அவளைப் போற்று, மதித்துக் காப்பாற்று.

2. உனது அனைத்து உறவுகளையும் கௌரவமாக நடத்து.

3. உனது இதயத்தையும், ஆன்மாவையும் உயர்ந்த பரம்பொருளை(இயற்கை / இறைவன்) நோக்கித் திறந்து வை.

4. ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு நோக்கத்திற்காகப் படைக்கப் பட்டது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தியாகத்தைச் செய்தே இப்பூமியில் வாழ்கின்றன. ஒவ்வொரு உயிரையும் மதித்துக் காப்பாற்று.

5. இந்தப் பூமியில் இருந்து உனக்குத் தேவையான அளவு மட்டுமே எடுத்துக் கொள். தேவைக்கு அதிகமாக எதையும் எடுத்து விடாதே.

6. செய்கின்ற செயல்கள் அனைத்தும் அடுத்தவர்களுக்கு நன்மை பயப்பதாக(தருவதாக) இருக்கட்டும்.

7. எல்லையில்லாத பரம்பொருளுக்கு(இயற்கை / இறைவன்) ஒவ்வொரு நாளும் நன்றி கூறு.

8. ஒவ்வொரு நாளும் உண்மையை மட்டும் பேசு. அதுவும் அடுத்தவர்களுக்கு நன்மை தருவதாக இருப்பின் பேசு.

9. இயற்கையின் ஒழுங்கின்படி வாழ்க்கை நடத்து.

10. வாழ்க்கைப் பயணத்தை ஆனந்தமாக நடத்து, அனுபவி. நீ பூமியில் வாழ்ந்தமைக்காக நன்றி உணர்வை விட்டுச் செல். அதிகமான தடயங்களை அல்ல.

 நன்றி:"Humans Are Free"

2 கருத்துகள்:

ப.கந்தசாமி சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பத்தும் முத்துக்கள்...

மிக்க நன்றி...

கருத்துரையிடுக