வியாழன், ஏப்ரல் 18, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 70, மன்னரைச் சேர்ந்தொழுகல்


கொளப்பட்டேம் என்றுஎண்ணிக் கொள்ளாத செய்யார் 
துளக்குஅற்ற காட்சி யவர். (699)

பொருள்: நிலைபெற்ற தெளிந்த அறிவினை உடையவர், 'அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டோம்' என்று கருதி அவன் விரும்பாதவற்றைச் செய்யார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக