சனி, மே 18, 2013

சுடும் வெயிலை ஜில்லாக்க...

கோடை பிறந்து விட்டாலே கொதிக்கும் சூரியனின் வெப்பம்தான் நினைவுக்கு வரும். கோடைக்காலம் குழந்தைகளின் கொண்டாட்ட காலம். கோடை வெயிலின் உக்கிரத்தை தணிக்க சிலர் மலை பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்கின்றனர். பலர் பூங்கா, கடற்கரை என நிழல்தரும் இடங்களுக்கு சென்று வெயிலின் வேகத்தை தணித்துக் கொள்கின்றனர்.

இந்த கோடையின் முக்கிய காலகட்டமான அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தாக்கம் சென்னை போன்ற பெரு நகரங்களில் வாழும் மக்களுக்கு நரக வேதனைதான். இந்த ஆண்டு மின்சார வெட்டு அதிகம் இருக்குமென்று இப்போதே பயமுறுத்த ஆரம்பித்து விட்டனர். கோடைக் காலத்தில் உண்டாகும் அதிக உஷ்ணத்தால் மனிதர்களுக்கு பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

தற்போது பலர் அலுவலகங்களிலம், வீடுகளிலும் குளிர் சாதன வசதி செய்துள்ளனர். போக்குவரத்து வாகனங்களிலும் குளிர்சாதன வசதிகள் உள்ளன. இதனால் சிலர் கோடையின் பாதிப்பு நமக்கு ஏற்படாது என்று நினைக்கின்றனர். அது தவறு கோடைக் காலத்தில் சுற்றுப்புற சூழ்நிலைக்கு ஏற்ப உடலானது தனது தகவமைப்பை மாற்றிக் கொள்ளும். இக் காலங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொள்வதாலும் பலர் பலவிதமான புதிய நோய்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர்.

குளிரூட்டப்பட்ட அறையிலிருந்து வெளியேறும் போது உடலை வெளியில் உள்ள உஷ்ணம் திடீரென்று பாதிக்க ஆரம்பிக்கும். இப்படி கோடைக்காலத்தின் பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட இயற்கையான வழியே சிறந்ததாகும்.

கோடைக்காலத்தில் உண்டாகும் நோய்கள்

கோடை வெயிலின் தாக்கத்தால் உடல் சூடேறி இரத்தம் உஷ்ணமாகி உடம்பில் பித்த நீர் அதிகமாவதால் உடல் பலவகையான பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது .

தோலில் உள்ள உப்பு சத்து திடீரென்று உறைந்து விடுவதால் தோலுக்கு கீழே படிந்து கட்டியாக மாறும். சில நேரங்களில் சிறு சிறு கொப்புளங்களாக மாறிவிடும். பொதுவாக கை அக்குள் பகுதிகள், தோள்பட்டை, முகத்தில் மூக்குப் பகுதியிலும் சுண்டு விரலிலும், வயிற்றுப் பகுதியிலும் மேலும் உடற்கூறுக்கு தகுந்தவாறு உடலில் வெளிப்படுத்தும். சில சமயங்களில் வேணல் கட்டி கொப்புளங்களாக மாறும்.

வெயிலில் அலைந்து வந்தவுடன் குளிர்ந்த நீரை உடனே... மேலும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக