புதன், டிசம்பர் 15, 2010

நித்தம் நித்தம் நெல்லுச் சோறு - அத்தியாயம் 11

"அடடா கம்பு இந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் பிரபலமா? நமது இலங்கையில் அதை வெறும் பொரி உருண்டையாகவும், மரணச் சடங்கில் உபயோகிக்கப் படும் 'பொரியாகவும்' அல்லவா தமிழ் மக்கள் உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்றேன் நான். இடையில் குறுக்கிட்டார் அவர் "இல்லையில்லை, நீங்கள் சொல்வது தவறு, சிங்கள மக்கள், இந்தத் தானியத்தை பல வகைகளிலும் உணவாக உட்கொள்கிறார்கள்" என்றார்.
எங்கள் நாட்டைப் பற்றி என்னைவிட அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கும் அந்தப் பெரியவரை ஆச்சரியத்துடன் நோக்கினேன்.

பரவாயில்லை எங்கள் நாட்டை என்னைவிட அதிகமாகவே தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என்றேன். அவரும் சிரித்தபடியே "அறிஞனைக் கேளாதே, அனுபவசாலியைக் கேள்" என்ற பழமொழியை உங்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகிறேன் என்றவர் தொடர்ந்தார், "இருப்பினும் எனக்கு எல்லாமே தெரியும் என்ற அகங்காரத்தோடு இதை நான் கூறுவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்" என்றார் தன்னடக்கத்தோடு.
அவர் கூறுவதைப் புரிந்துகொண்ட நான் "நீங்கள் தன்னடக்கம் கருதி எதைக் கூறினாலும் நான் விடப் போவதில்லை, நீங்கள் ஒரு சிறந்த அனுபவசாலி என்பது உண்மை" என்றேன்.


**********************************************************************************


திரு பழனிச்சாமி அவர்களுடன் பேசிய பின் 'கம்பு' என்ற தானியம் தமிழ்நாட்டில் எத்தகைய முக்கியத்துவம் பெறுகிறது? என்று தமிழ்நாட்டு இணயத்தளங்களில் தேடினேன் அதில் ஒரு கவிதையும் சிக்கியது, முக்கியத்துவம் கருதி இத்தொடரில் அக்கவிதையை வாசகர்களுக்காகத் தருகிறேன்.

ஏக்கம் 

கம்பஞ் சோற்றுக்கும் 
தென்றல் காற்றுக்கும் 
ஒற்றையடிப் பாதைக்கும்
சைக்கிள் சவாரிக்கும் 
குளிர்ந்த மோருக்கும் 
பனைமர நுங்குக்கும் 
அம்மா அன்பில் பங்குக்கும் 
மனம் ஏங்குதடி ........


அவசர சாண்ட்விச்சும் 
பனிமழையும், குளிர்காற்றும் 
நெரிசல் ஹைவேயில் 
டொயோட்டாவிலும்
கப்புச் சீனோவும்
கோக் பாட்டிலுமாக
வாழ்க்கை தொடருதடி 
நன்றி: தாரா, http://siragugal.blogspot.com 

(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக