புதன், ஜூன் 29, 2011

என்னையே நானறியேன் - 2

ஆக்கம்: கௌசி,  ஜேர்மனி
கணவனின் உழைப்பும் தன்மேல் அவன் கொண்ட காதலின் பிரதிபலிப்பும் ஒன்றாய் அவள் கண்களுக்குத் தெரிந்தது. அழகான சோபாவில் காய்த்துப் போன அவன் கரங்களின் அடையாளங்கள் தென்பட்டன. சமையலறை அடுப்பிலே நித்திரையின்றிச் சிவந்திருந்த அவன் கண்கள் தோன்றின. ரம்மியமான தளபாட அழகிலும் உழைத்து உழைத்துத் தேய்ந்து போன அவன் உடற் பொலிவு தென்பட்டது. மனம் இளகிப் போனாள். அவன் இரு கரங்களையும் 

இணைத்தெடுத்தாள். தன் கண்களில் ஒற்றிக் கொண்டாள். ' இஞ்ச பாருங்கோ! உங்களின்ர இந்த சின்ன இதயத்துக்குள்ள ஒதுங்க ஒரு இடம் தந்தாலே எனக்குப் போதும் பாருங்க. ஆபத்துக்கு உதவாத பிள்ளை> அரும்பசிக்கு உதவாத அன்னம்;> தாபத்தைத் தீராத தண்ணீர்> தரித்திரம் அறியாத பெண்கள்> கோபத்தை அடக்காத வேந்தன்> குறுமொழி கொள்ளாச் சீடன்> பாபத்தைத் தீராத் தீர்த்தம்> பயனில்லையாம் ஏழும். எனவே தரித்திரம் அறியாத பெண்ணல்ல நான். இரத்தம் சிந்தி நீங்க என்னை ராணி போல் வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் பெரிசா நான் கனவொன்றும் காணவில்லை. எப்படி நீங்கள் வாழுகின்றீர்கள் என்றெல்லாம் கேட்டு என் கழுத்தை நான் உங்களிடம் நீட்டவில்லை. எப்படி நீங்கள் வாழ்ந்தாலும் உங்களோடு வாழவேண்டும். அதுதான் எனக்குச் சந்தோஷம்'' அவள் மனமும் உதடும் உதிர்த்த வார்த்தைகளில் உள்ளம் நெகிழ்ந்தான் 
கரண். ஆடம்பரமான வாழ்வு வரும் போகும். ஆனால் ஆதரவான உள்ளம் கிடைப்பதும் அரிது> தொடர்வதும் அரிது. 
                          
வரதேவி வாழ்க்கைத்துணைவன் ஆதரவான ஆண்மகன் மட்டுமல்ல> நாடுவிட்டு வேறுநாடு வந்தாலும்> தாய் பாலோடு சேர்த்துப் பருகத் தந்த தமிழ் அறிவுடன்> நூற்றாண்டு கடந்தும் அந்நிய மண்ணில் தமிழ் ஆட்சிபுரிய வேண்டி ஹரிதாஸ் நிறுவன ஆதரவுடன் தமிழ்க்கல்விச்சாலை அமைத்துத் தனியனாய்த் தமிழ் கற்பித்த வந்த தமிழ்மகன். 
         அவன் போட்டுவிட்ட பாதை மேல் போகத்துணிந்தாள் வரதேவி. அவள் ஆசிரியையாய்ப் பணியாற்றிய அறிவு மட்டும் கொண்டவளல்ல. குழந்தைகள் மனங்கோணாக் குணவதியும் கூட

தம்மிலும் தம் அறிவால் வளர்வார்> சிறப்புடையவராயின். உள்ளம் குதூகலிப்பார் உண்மை அசிரியர். ஒருவர் கற்ற இன்பத்திலும் மேலாமே தான் கற்ற கல்வி பிறர் அறியச் சொலல். இத்தன்மை அனைத்தும் பெற்ற வரதேவி> புகலிடம் தேடிவந்த இடத்திலேயே வந்து மூன்றாம் நாள் புகழிடம் பெறும் மாணவப்பூங்காவுக்குள் நுழைந்தாள். பூத்தும் பூக்காதிருந்த பூந்தளிர்கள் கண்டு அவள் மூளைக்குள் இலட்சிய விருட்சம் வளரத் தொடங்கியது. தான் கற்றவை தான் கற்பித்தல் மூலம் பெற்ற அநுபவச் சொத்து அத்தனையையும் இந்தத் தளிர்களுக்கு நீராய் வார்க்கத் தொடங்கினாள். தவிர்க்க முடியாதது பசியும்>தாகமும். அடக்கமுடியாதது ஆசையும்> துக்கமும். வரதேவி கொண்டது கல்வித் தாகம். அவளால் அடக்கமுடியாத ஆசை எதிர்கால சிற்பிகள்ஆசிரியப்பணி ஒரு ஆனந்தப்பணி. கல்விநாடிவரும் செல்வங்களுக்குள்ளே புகுந்துவிட்டால்> கவலைகள் விடைபெறும். உள்ளம் துள்ளல் இசைபாடும். அதட்டவும் அணைக்கவும் ஆசானுக்குள்ள உரிமை பெற்றோருக்குள்ள உரிமை போலானது. அதைச் சேவையாய் உணர்வோர் உடல்வலி உளவலிநோக்கார். ஆசிரியரை ஒட்டிக் கொண்ட மாணவர் எத்தனை ஆண்டுகள் கடந்தும் அவரை மறவார். எதிர்கால உலகச் சிற்பிகள் சரியான முறையில் வடிக்கப்படாவிட்டால், உலகம் அவர்கள் கைகளால் உருமாறிச் சீரழியும். விஷக்கிருமிகள் போல் உலகுநோய் பெற்று சிறிதுசிறிதாய் உலகத்தையே அழித்துவிடும். எனவே ஆசிரியர் என்பான் ஆசு இரியர் குற்றங்களை விட்டோடச் செய்வார். ( இவர்கள் மாணவர்களுக்கு உலகத்தையும் பாடத்தையும் கற்றுத் தரல் வேண்டும். மூலபாடங்களை விதி மறவாமல் பாதுகாக்கக் கற்பித்தல் வேண்டும். கேட்டதைப் பலமுறை சிந்திக்க வைத்தல் வேண்டும். மனதில் பதியக் கேட்ட கருத்துக்களை அவர் மனதில் மீண்டும் கேட்டுப் பதிய வைத்தல் வேண்டும். கற்கும் மாணவர்களோடு பழகத் தூண்டுதல் செய்தல் வேண்டும். ) எனவே இப்பணியூடு வாழும் நாட்டில் தமிழ் மணம் வீசவேண்டும் என்றெண்ணிப் பணி தொடர்ந்தாள் வரதேவி. இப்படி இந்நாட்டில் எத்தனை திக்குகளில் இத்தகு நோக்குடன் பற்பலர் வாழ்ந்தார்களோ! இப்போது சாம்பல் மூடிய நெருப்பாய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களோ! 
                       
இவ்வாறாக உள்ளம் கொண்ட தீவிரம் தொடர்ந்தது. அத்தோடு வயிற்றில் அவள் உதிரம் சுமந்த வாரிசொன்றும் உருவானது. ஒரு குறிக்கோளுடன் தொடர்வார் அக்குறிக்கோள் நிறைவேறப் பலவித முயற்சிகளில் ஈடுபடல் புதிதன்று. ' இஞ்சபாருங்கோ! படிப்பிப்பது மட்டும் பிள்ளைகளுக்குப் போதாது. ஒரு பிள்ளை கேட்கிறதை மறந்து போகும். பார்க்கிறதை நினைவில் வைக்கும். செய்வதைத்தான் கற்றுக் கொள்ளும். அதனால், பரீட்சை வைப்போம்> கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சி கொடுப்போம். போட்டிகள் மூலம் திறமைகளைக் கொண்டுவருவோம'';. என்று கணவனுக்கு உந்துதலைக் கொடுத்தாள். ஆனால், இந்த சமுதாயம் இருக்கிறதே, இனிப்பாய் இருந்தால், விழுங்கிவிடும். கசப்பாய் இருந்தால் துப்பிவிடும். இவள் முயற்சிகளின் முடிவுதான் என்ன...?
(தொடரும்)

11 கருத்துகள்:

Sakthy, DK சொன்னது…

Very good

Theepan, Luzern (CH) சொன்னது…

மிக சுவாரஸ்யமான தொடர்

seelan சொன்னது…

we will happy to reading this article

PALAN SWEDEN சொன்னது…

Super Good

Ramesh, DK சொன்னது…

Interesting..

Sinthu, Canada சொன்னது…

Well done

kowsy சொன்னது…

வாசகர்கள் அனைவருக்கும் நன்றி தொடர்ந்து வாசியுங்கள்.

Thavapalan DK சொன்னது…

Paraddukkal.

Parvathi Denmark சொன்னது…

வாசிப்பதற்கு நல்ல தொடர் .

Mohan, Denmark சொன்னது…

Good

vinothiny pathmanathan dk சொன்னது…

உங்கள் தொடர் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது .பாராட்டுக்கள்

கருத்துரையிடுக