வெள்ளி, டிசம்பர் 23, 2011

விண்வெளியில் இருந்து பூமிக்கு வந்த மர்மப் பொருள் !

ஆபிரிக்க நாடான நமீபியாவில் விண்வெளியில் இருந்து இரும்புக் குண்டு ஒன்று விழுந்தது. தலைநகர் விண்ட்கொயக்கில்(Windhoek) இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்த அந்த இரும்புக் குண்டு 1.1 மீட்டர் அதாவது 43 'இஞ்ச்' நீளமும், 35 செண்டி மீட்டர் அகலமும் கொண்டது.
இந்தக் குண்டின் எடை 6 கிலோ இருந்தது. இரு 'அரை வட்டங்கள்' வெல்டிங் செய்து ஒட்ட வைக்கப்பட்டிருந்தது. அந்தக் குண்டு விழுந்ததால் பூமியில் 3.8 மீட்டர் அகலத்தில் 33 செ.மீட்டர் ஆழம் ஏற்பட்டது. இந்தக் குண்டு எங்கிருந்து எப்படி விழுந்தது எனத் தெரியவில்லை. எனவே, இது குறித்து நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்தக் குண்டு கடந்த நவம்பர் மாதம் மத்தியில் விண்ணில் இருந்து விழுந்தது. இரும்பினால் ஆன இந்தக் குண்டினால் ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. வெடிக்கக்கூடிய தன்மையற்றதாக அது இருந்ததாக விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரி வில்கோ தெரிவித்தார்.
தென் ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்று விண்வெளியில் இருந்து குண்டுகள் விழுந்துள்ளன.
நன்றி: www.tamilkurinji.in  

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

These are parts from International space station.

கருத்துரையிடுக