சனி, ஜனவரி 22, 2011

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 11

ஆக்கம் இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்:
கடந்த வாரம் இத்தொடரின் பத்தாவது அத்தியாயத்தில் கர்ப்பத்தடை முறையில் ஏற்பட்ட ஒழுங்கீனங்கள் எவ்வாறு ஒரு தாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளைப் பாதிக்கின்றன என்பது பற்றி ஆராய இருப்பதாக எழுதியிருந்தேன் அல்லவா? அதற்கு முன்னதாக நாம் நமக்குள்ளேயே சில  கேள்விகளைக்  கேட்டுப் பார்ப்போம்.

  1. இலங்கை போன்ற யுத்தத்தால் பாதிக்கப் பட்ட நாட்டில் அங்கவீனர்கள்(Handicap) வாழ்வது போலவே யுத்தத்தால் அதிகம் பாதிக்கப் படாத(அண்மைக் காலத்தில்) மேற்கத்தைய நாடுகளிலும் பெருமளவில் பிறப்பிலேயே அங்கவீனர்களான மக்கள் வாழ்கின்றனரே, அது ஏன்?
  2. மருத்துவ வசதிகளும், அறிவியலின் வளர்ச்சியினால் கிடைத்த அபரிமித சாதனைகளும் நிறைந்த ஐரோப்பிய நாடுகளில் மன நலம் குன்றிய, மற்றும் பிறப்பிலேயே மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், உடலியல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறப்பதற்குக் காரணம் என்ன?
  3. மருத்துவ உலகில் அதீத சாதனைகள் படைத்திருக்கும் இந்த வளர்ச்சியடைந்த நாடுகளால், மக்களில் பலருக்கு உடல் ஊனமான குழந்தைகள் பிறப்பதை ஏன் குறைக்க முடியாமல் போனது?
மேலேயுள்ள கேள்விகளுக்கு விடை காணப் புகுந்தோமானால் இந்நாட்டில் வாழுகின்ற வாழ்க்கை முறைகளே இவற்றிற்கெல்லாம் காரணம் என்பது தெரிய வரும்.
 (தொடரும்)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக