சனி, நவம்பர் 27, 2010

எந்தக் குழந்தையும் - அத்தியாயம் 5

இக்கட்டுரை கடந்த 22.10.2010 அன்று அந்திமாலையில் வெளியாகியது, வாசிக்கத் தவறிய வாசகர்களுக்காக மறு பிரசுரமாகிறது.
ஆக்கம்.இ.சொ.லிங்கதாசன் 
கர்ப்ப காலம் 1 தொடக்கம் 10 மாதங்கள் வரை தாய், தந்தை கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயங்கள்:


8. தாயானவள் தினமும் தன் கண்ணால் யாரைப் பார்க்கிறாளோ, யாருடன் அதிகநேரம் செலவிட நேர்கிறதோ, அல்லது பழக நேரிடுகிறதோ அந்த நபரின் நடை, உடை, பாவனை, நிறம், ஆற்றல், போன்ற அம்சங்களைக் கொண்ட குழந்தை பிறக்கிறது. இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை, ஆயினும் பல சமூகங்களிலும், உளவியல் சித்தாந்தங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மையாகும். உதாரணமாக எமது தமிழ் சமூகத்தில் ஒரு குழந்தையைப் பார்த்து "இவன் பேரனைப் போல உள்ளான்", "இவன்
See full size imageமாமனைப் போல இருக்கிறான்", "இவள் உரித்து வைத்து பேத்தியாரைப் போல" என்றும் கூறப்படுவதற்குக் காரணம் என்ன? அந்தத் தாய் கர்ப்பவதியாக இருக்கும்போது, தினமும் யாரைப் பார்த்தாளோ, அந்நபரின் உருவம், விபரிக்க முடியாத, அறிவியலின் கண்களுக்குப் புலப்படாத ஒரு சில அம்சங்கள் காரணமாக, குழந்தையின் உருவத்திலும், குணாதிசயங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தாயானவள் கர்ப்பக் காலம் முழுவதும், நல்ல மனிதர்களின் சகவாசம், இன்சொல், நற்செயல், நல்ல கொள்கை உடைய மனிதர்களைத் தினமும் பார்க்க, பழக, உரையாட நேர்ந்தால் அவர்களது குணத்தை ஒத்த குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது விஞ்ஞான உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத, அறிவியலின் கண்களுக்குப் புலப்படாத உண்மையாகும்.

Indian_child_29. இதேபோல் இக்காலப் பகுதியில் தாயானவள் தான் பார்க்கின்ற திரைப்படங்கள், வாசிக்கின்ற புத்தகங்கள், கேட்கின்ற கதைகள் பற்றியும் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் இத்தகைய காரணிகள் கூட குழந்தையின் அறிவில், எதிர்கால செயற்பாட்டில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதேபோல் நல்ல இசையைக் கேட்கும் வாய்ப்புள்ள கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தையானது இசையில் நாட்டமுள்ள, திறமையுள்ள குழந்தையாக இருக்கிறது என்கிற விடயம் ஆராய்ச்சிகளின் மூலம் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.

10. ஒரு குழந்தையானது, தனக்குத் தேவையான அறிவில் மூன்றிலொரு பகுதியைத் தாயின் கருவிலிருக்கும்போதும், மற்றொரு மூன்றிலொரு பகுதியைத் தனது ஐந்தாவது வயதிற்குள்ளும்("ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது") இறுதி மூன்றிலொரு பகுதியைத் தனது வாழ்நாளின் மீதமுள்ள காலப் பகுதி முழுவதும் (சுமார் 70 வயதுவரை) கற்றுக் கொள்கிறது என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

(அடுத்த வாரமும் தொடரும்) 
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக