வெள்ளி, அக்டோபர் 21, 2011

ஆன்மிகம் - 5

ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்.


        ஆலயம் 


தேவசபையாக ஆலயம் விளங்க
தேவராசர்களாக தெய்வங்களை நினைந்து
தேவாரப் பண்களால் ஆராதனை செய்து
தேவதாசர்களாய் தொண்டு செய்கிறோம்.  (தேவசபை)
செய்வினை, வெற்றி, தோல்வி கூறி
பெய்திடு அருளென வேண்டும் ஆலயம்.
உயத்;திட உலகில் வழிகள் திறக்க
கொய்திடும் வினைகளின் ஊதியக் கந்தோர். (தேவசபை)
ஆசீர்வாதம் கூலியாகும் அருளரங்கம்
ஆன்மஞானம், ஆன்மசுத்தி பெறுமரங்கம்
ஆன்மா ஈடேறும் முயற்சியரங்கம்
ஆலயமாம் புனித இறை சந்நிதானம்.     (தேவசபை)

1 கருத்து:

vinothiny pathmanathan dk சொன்னது…

ஆன்மா லயிக்கும் இடமே ஆலயம்

கருத்துரையிடுக