வியாழன், டிசம்பர் 31, 2015

இன்றைய சிந்தனைக்கு

நகைச்சுவையான  தமிழ்நாட்டுப் பழமொழிகள் 


1. அவசரத்துக்கு அண்டாக்குள்ளயும் கை நுழையதாம். 

2. கோணல் சட்டி ஆனாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

3. தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?

4. போகாமல் கெட்டது உறவு, கேளாமல் கெட்டது கடன்.

5. "அடியேன்னு கூப்பிட ஆத்துக்காரி இல்ல, குழந்தை பேரு கோபால கிருஷ்ணனாம்".

6. ஏண்டா ராமா கல்யாணம் பண்ணிக்கலைன்னு கேட்டா, நீயே பொண்டாட்டியா இருன்னானாம்". 

  

செவ்வாய், டிசம்பர் 29, 2015

'கடற்கன்னி' என்பது உண்மையா? கட்டுக் கதையா?

கடற்கன்னி (Mermaid) என்பது மேற் பகுதி பெண்ணாகவும், கீழ்ப்பகுதி மீன் வாலும் கொண்ட ஓரு நீர்வாழ் உயிரினம் பற்றிய கற்பனை விபரிப்பாகும். கடற்கன்னி பற்றிய நாட்டாரியல் கதைகள் ஐரோப்பா, சீனா, இந்தியா என உலகலாவிய கலாசாரங்களில் காணப்படும் ஓர் விடயமாகும். முதன் முதலாக இது பற்றிய கதைகள் புராதன அசிரியாவில்(தற்போதைய 'ஈராக்') காணப்பட்டது. 'அட்டாகடிசு' எனும் தேவதை தன் மனிதக் காதலனைத் தவறுதலாகக் கொன்றதும், அவமானத்தினால் கடற்கன்னியாக மாறினாள் என அக்கதை கூறுகின்றது. இன்னுமொரு நாட்டாரியல் பின்வருமாறு கூறுகிறது: "அஃதாவது மனிதாபிமானம், நன்மை செய்தல் அல்லது மனிதனுடன் காதலில் வீழ்தல் ஆகிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு 'கற்பனையாக' இந்தக் 'கடற்கன்னி' பற்றிய கதைகள் இருக்கக் கூடும்" எனக் கூறுகின்றது.


ஆனால் இன்றுவரை உலகில் ஒரு தடவையேனும் மேற்கூறப் பட்ட படைப்பாகிய 'கடற்கன்னியை' கண்ணால் கண்டவர் எவருமில்லர். வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் இனங்கள் மீனவர்களின் வலையில் பிடிபடும்போது அது 'கடற்கன்னி' என மீனவர்கள் நம்புவதும், அதுவே வதந்தியாகி, பத்திரிகைச் செய்திகளாக இடம்பெறுவதும் உண்டு. ஆனால் 'கடற்கன்னி' எனப் படுவது ஒரு கற்பனைப் படைப்பு என்பதை விஞ்ஞானிகள் அறிவர்.

திங்கள், டிசம்பர் 28, 2015

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ 
புணர்ந்துஊடி நிற்போம் எனல். (1260)  

பொருள்: தீயில் கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிர்க்கு 'இசைந்து ஊடி நிற்போம்' என்று ஓடும் தன்மை உண்டோ? 

இன்றைய பொன்மொழி

கன்ஃபூஷியஸ் 

நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது;
நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது;
நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது.

செவ்வாய், நவம்பர் 17, 2015

மரண அறிவித்தல்

காசிலிங்கம் படிகலிங்கம் 
இலங்கை யாழ்ப்பாண மாவட்டம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், 798 கட்சன் வீதி, வட்டக் கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த, தற்போது விசுவமடுவில் வசித்தவருமாகிய திரு.காசிலிங்கம் படிகலிங்கம் அவர்கள் நேற்றைய தினம்(16.11.2015)  இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற காசிலிங்கம் தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,  
காலஞ்சென்ற கௌசலாதேவியின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, சிவக்கொழுந்து ('அல்லைப்பிட்டி ஆச்சி') தம்பதியினரின் அன்புப் பேரனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(குலசிங்கம்) தங்கம்மா தம்பதியினரின்அன்பு மருமகனும், 
சந்திரகாந்த், பிரசாந்த் ஆகியோரின் அன்புத்தந்தையும், லீலாவதி(இலங்கை), கமலாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற நடராஜா, மற்றும் செல்வரத்தினம்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி(அல்லைப்பிட்டி), 

இராசம்மா(யோகபுரம்,மல்லாவி),தெய்வானை(அல்லைப்பிட்டி), நாகம்மா(மண்டைதீவு), மற்றும் திருமதி.சிவகுரு கனகம்மா(மண்டைதீவு) ஆகியோரின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(மண்டைதீவு), செல்லத்துரை-'சாத்திரியார்'(விசுவமடு) ஆகியோரின் அன்பு மருமகனும்,
நிஷ்யந்தி(அவுஸ்திரேலியா),கஜந்தி(இலங்கை) கஜன்(அவுஸ்திரேலியா), ஆதவன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஈமக் கிரியைகள் நேற்றைய தினம்(16.11.2015) திங்கட்கிழமை பிற்பகல் அவரது விசுவமடு இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விசுவமடு 12 ஆம் கட்டையில் உள்ள இந்து மயானத்தில் தகனம் செய்யப் பட்டது.
உற்றார், உறவினர்,நண்பர்கள் இவ்வறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.  


தகவல்:திருமதி. சாருமதி சொர்ணலிங்கம்(சகோதரி)



தொடர்புகளுக்கு :
குடும்பத்தினர்.
0094-779671954

செவ்வாய், நவம்பர் 10, 2015

தீபாவளி வாழ்த்துக்கள்

அனைத்து வாசகப் பெருமக்களுக்கும் எமது உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.


"ஒன்றுபட்டு உயர்வோம்"
ஆசிரிய பீடம் 
அந்திமாலை.