tag:blogger.com,1999:blog-8993661528696779948.post664046803071732551..comments2023-10-30T11:35:48.899+01:00Comments on அந்திமாலை: தாரமும் குருவும் - பகுதி 4.1anthimaalai@gmail.comhttp://www.blogger.com/profile/07943598821174620289noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8993661528696779948.post-6990707364434064912011-06-20T17:39:15.873+02:002011-06-20T17:39:15.873+02:00சகோதரியின் கருத்துக்கு மிக்க நன்றி. ஒரு காலத்தில் ...சகோதரியின் கருத்துக்கு மிக்க நன்றி. ஒரு காலத்தில் தீவுப் பகுதிக் கிராமங்களிலேயே மிகவும் செழிப்பாக விளங்கிய ஊர் அது. "யார் கண் பட்டதோ? 1990 ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப அழிவுகளைச் சந்தித்து விட்டது. இப்போதுதான் அங்கு மானுடம் துளிர்க்க ஆரம்பித்துள்ளது. பட்ட துன்பங்கள் போதாதென்று அண்மையில் சில இணையத் தளப் 'புண்ணியவான்கள்' அல்லைப்பிட்டியை 'மும்பை சிவப்பு விளக்குப் பகுதியாகச்' சித்தரித்து மலினப்படுத்தி எங்கள் மனங்களில் ஆறாத வடுவை ஏற்படுத்தி விட்டார்கள். இந்தத் தொடர் என் ஆத்ம திருப்திக்காகவே எழுதத் தொடங்கினேன். எனக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ஆதரவு தொடர்ந்து எழுதவேண்டும் என்ற வைராக்கியத்தை என்னுள் தூண்டுகிறது. உங்கள் ஆதரவுக்கு நன்றி.<br />அன்புடன் <br />இ.சொ.லிங்கதாசன்இ.சொ.லிங்கதாசன், டென்மார்க்.noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8993661528696779948.post-60056007316446660572011-06-20T17:01:47.256+02:002011-06-20T17:01:47.256+02:00லிங்கதாசன் உங்களின் இந்த தொடரையும் நானும் தொடர்ந்த...லிங்கதாசன் உங்களின் இந்த தொடரையும் நானும் தொடர்ந்து வாசித்து வருகிறேன் . அல்லைப்பிட்டிக்கு எங்கள் குடும்ப நண்பரின் வீட்டிற்கு சென்று வரும் வாய்ப்பு எங்களுக்கு அண்மையில் கிடைத்தது . அல்லைப்பிட்டி தற்போது மிகவும் வெறிச்சோடிக் காணப்படுகிறது. நயினாதீவிற்கு போய்விட்டு வரும்போது அல்லைபிட்டி ஊருக்குள் நுழைந்த நேரம் மாலை 4 அல்லது 5 மணி இருக்கலாம் .நாங்கள் செல்ல வேண்டிய முகவரியை விசாரிப்பதற்காக யாராவது வருகிறார்களா என்று 10 நிமிடங்களுக்கு மேலாக காத்திருந்தும் பலனில்லாமல் சில வீடுகளிளுக்கு சென்று விசாரிக்க முற்பட்ட போது அங்கே கூட மனிதர்கள் யாரும் இல்லை. இறுதியில் நாங்கள் செல்ல வேண்டிய முகவரிக்கே சென்று அவர்களின் வீட்டை உறுதி செய்து கொண்டோம் .இது தான் இன்றைய எம் ஊர்களின் நிலை .உங்கள் தொடர் மிகவும் நன்றாக இருக்கிறது .தொடர்ந்து எழுதுங்கள் .vinothiny pathmanathan dknoreply@blogger.com