புதன், நவம்பர் 24, 2010

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு -அத்தியாயம் 8


ஆக்கம். இ.சொ.லிங்கதாசன்


எமது நாட்டில் ஒரு துள்ளிசைப் பாடல்கூட(பொப் பாடல்) உண்டு, அது "சோளஞ்சோறு  பொங்கட்டுமா, இறுங்குச்சோறு பொங்கட்டுமா? சொல்லுங்கோ மருமகனே! என்றுதான் தொடங்கும், சரி இறுங்கில்(கம்பு) சோறு சமைக்க முடியும், ஆனால் சோளத்தில் சோறு சமைக்க முடியுமா? என்று எனது தரப்பு சந்தேகத்தை அவரிடம் கேள்வியாகத் திருப்பினேன்.
அவர் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரித்தபடியே கூறத்தொடங்கினார்.
"சோளத்தில் சோறு சமைக்க முடியாது என்பதை அனுபவ ரீதியாக அறிந்திருப்பீர்கள் என்றல்லவா நினைத்தேன், சரி அது போகட்டும், அது பாடலின் சந்த வசதிக்காக எழுதப் பட்டிருக்கலாம்,  ஆனால் சோள மாவில் 'கூழ்' காய்ச்ச முடியும்,  சோளத்தில் அல்லது சோளமாவில் ஏனைய தானிய வகைகளைப் போல் பல உணவுப் பண்டங்களைத் தயாரிக்க முடியும்.
சோள மாவில் தயாரிக்கப் படும் பிட்டு,ரொட்டி போன்றவற்றின் சுவையே அலாதியானது, மட்டுமல்லாமல் அத்தானியத்தில் மனித சமிபாட்டுத் தொகுதி சீராக இயங்குவதற்கான போதுமான நார்ப்பொருள்(Fibre) உள்ளது.இதிலுள்ள நார்ப்பொருளானது, அரிசி, கோதுமை போன்ற தானியங்களில் உள்ளதைவிட அதிகம். இவ்வாறு உணவில் சோளத்தைச் சேர்த்துக் கொள்பவர்களுக்கு மலச்சிக்கல்(Constipation) என்ற பிரச்சனையே ஏற்பட வாய்ப்பில்லை".என்றார்.
"அது தெரிந்துதான் ஐரோப்பியர்கள் தமது நாளாந்த உணவுகளில் குறிப்பாக சலாட்(Salad) போன்றவற்றில் சோளத்தையும், பாண், கேக் போன்றவற்றில் சோள மாவையும் சேர்க்கிறார்களா? என்றேன் நான். அதற்கு பதில் கூறுமுகமாக பின்வருமாறு கூறினார் அந்த அனுபவசாலி: "நீங்கள் கூறுவது மெத்தச் சரி, அத்துடன் ஐரோப்பாவில் விற்பனையாகும் போத்தலில் அடைக்கப்பட்ட பெரும்பாலான 'குழந்தை உணவுகளில்' சோளமும் குறிப்பிட்ட வீதத்தில் கலக்கப் பட்டிருக்கும், ஏனெனில் சோளத்தில் அரிசி, கோதுமையைவிட புரதச் சத்தும் அதிகம். அது மட்டுமன்றி மதுபானங்கள் தயாரிப்பிலும் சோளம் முக்கிய பங்கு வகிக்கிறது"
"என்னது மதுபானத் தயாரிப்பில் சோளமா"? என்றேன் நான் வியப்புடன்.

(தொடரும்)
உங்கள் கருத்துக்களும் வரவேற்கப் படுகின்றன.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

பல நல்ல கருத்துக்களை கொடுத்திர்கள் . நார்பொருள் என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் அடைப்புக்குறியில் (Fibre)என்று கொடுத்தது பலருக்கு உதவியாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

கருத்துரையிடுக